Friday, August 6, 2010

தபூ சங்கர் ....


கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

################################

காற்றோடு

விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.

################################

நான் சமைத்த பாவக்காயை

நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..

-தபூ சங்கர் ....

No comments: