Monday, August 16, 2010

இளையபாரதி

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!

+-+-+-+-+-+-+-+-+-+-+-

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!

+-+-+-+-+-+-+-+-+-+-+-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
, ...


இளையபாரதி

No comments: