Monday, January 31, 2011

நெல்லை ஜெயந்தா

நெல்லை ஜெயந்தா
+-+-+-+-+-+-+-+-+-+-+-

மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது

வேடனுக்குத் தப்பிய
கானகப் புலியொன்று
இன்றிரவு
என் மேஜையில்
படுத்திருகிறது.
+-+-+-+-+-+-+-+-+-+-+-


வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.
+-+-+-+-+-+-+-+-+-+-+-

No comments: