Monday, January 31, 2011

காதல் விழுதுகள்....

இந்தியாவில்
பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்

+-+-+-+-+-+-+-+-+-+-+-

இதழ்கள் உதிரும'
என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்.
நீ மறப்பாய்
என தெரிந்தும்
சுமக்கிறேன்
உன் நினைவுகளை...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

அதே கோவில்....
அதேஅம்மன் .
அதேகுளம..
அதேபடிகள்
உனக்கு பிடித்த
அதே பச்சை சேலையில் நான்..
என் கரம் பற்றியிருக்கும்
கைகள் மட்டும் கணவரது...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

உனக்கு பிடித்தவைகள்
அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு
பிடிக்குமா
என்பதை தவிர...

+-+-+-+-+-+-+-+-+-+-+-

"ஆட்டோகிராப்பில்
உன்
கண்ணீர் துளி பட்டதால்...
அழிந்த எழுத்துக்கள்..
சொல்லாமல் சொல்கிறது .
நீ சொல்லாமல் போன
உன் மனதை..."

+-+-+-+-+-+-+-+-+-+-+-

" அவளை படைத்து விட்டு
பிரம்மன்
கை கழுவி கொண்டான்...
அங்கே ....
தாமரை மலர்கள்
பூத்தன..."


+-+-+-+-+-+-+-+-+-+-+-

ஐ லவ் யூ என்றேன்
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.

+-+-+-+-+-+-+-+-+-+-+-

யார் வேண்டுமானாலும்
உன் காதலனாக...
கணவனாக...
ஏன் கடவுளாக.
நான் மட்டுமே
உன் காதலாக...!


குறிப்பு:

இதை இப்படிக் கூட சொல்லலாம்,
'யார் வேணும்னாலும்
உதட்டை....
உடம்பை...
ஏன் உயிரைக்கூட தொடலாம்.
நான் மட்டுமே உன் மனசை....
!'

+-+-+-+-+-+-+-+-+-+-+-

No comments: